Thursday, August 14, 2008

சுதந்திரம்

தமிழனுக்கு சுதந்திரம் கொண்டாட என்ன யோக்கிதம் இருக்கிறது
நீ இந்தியாவோடு இருப்பதால் என்ன பெற்றாயோ
அதைவிட இழந்ததுதான் அதிகம்
உதாரணமாக தமிழ் என்கிற நம் மொழியின் தனித்துவத்தை இழந்தோம்
எ-டு,
நம் தமிழ் மொழி தமிழர்களாகிய நாம் அன்றாடம் உபயோகிக்கும் ரூபாய் தாள்களில் பத்தோடு பதினொண்ணாக எங்கோ கிடக்கிறது, இதை பார்க்கும்போதெல்லாம் எத்தனை நாள் வேதனை பட்டிருப்பேன் தெரியுமா,
நம் தமிழ் மொழி ஒன்றும் இன்று நேற்று தோன்றிய மொழி அல்ல,
இராயிரம்(2000) ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி,
மேலும் பாஸ்ஃபோட்டில்(Pass Port) தமிழ் மொழியை இழந்தோம்,
ப்பேன் கார்டுடில் (Pan Card) தமிழ் மொழியை இழந்தோம்,
விமான நிலயத்தில் தமிழ் மொழியை இழந்தோம்,
எடி எம்மில் தமிழ் மொழியை இழந்தோம், போததாத குறைக்கு
தமிழ் நாட்டில் குக்கி கிராமத்தில் கூட ஹிந்தி திணிப்பு.
மேலே கூறிப்பிட்டது தமிழ் மொழியின் உரிமையை நாம் இழந்தது.
தமிழ் மொழியின் உரிமையை மட்டும்மா இழந்தோம்
தமிழர்களாகிய நம் உரிமைகளையும் இழந்தோம்
எ-டு,
அன்றாடம் ஒவ்வோறு மனிதனுக்கும் வாழ்வில் தேவைபடுவது தண்ணிர், அந்த தண்ணிர் தர ஒரு மாநிலத்துக்கும் மனம் இல்லை, அட நாம அதிகம் கேட்கவில்லை நமக்கு தர வேண்டிய தண்ணிரைதான் கேட்கிறோம், அதுவும் நடுவன அரசால் ஒரு குழு அமைத்து அது அராய்ந்து நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து அதன்பால் ஆணையிட்ட தண்ணிரைதான் கேட்டோம், நீதிமன்றத்தை மதித்தார்களா மாறாக காலால் மிதித்தார்கள்,
சுனாமி பேரழிவு, மலேசியாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முரை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முரை, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முரை, இலங்கை கடற்படையால் சுடப்படும் அப்பாவி தமிழர்களை பற்றியும், நம் தமிழ் நாட்டில் தமிழன் வாழ்வுக்காக கொண்டுவரும் திட்டத்தை கடவுளின் பெயரால் வடநாட்டவர்கள் ஏதிர்ப்பதும் இப்படி தமிழர்களுக்கு ஏதிரான உரிமை மீறல்களை நம் நடுவன அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது
இந்தியானு சொல்றதுல என்னடா அர்த்தம் இருக்கு போங்கடாடேய், அன்று ஆங்கிலேயன் ஆண்டான் இன்று வடநாட்டான் ஆழ்கிறான், இதையெல்லாம் பார்கும்போது வெள்ளையனே தேவலாம் போல
தமிழனே ஆகஸட் 15 சுதந்திர தினம் உனக்கு அல்ல, நீ இன்றும் அடிமைதான்
இதுபோல் உங்கள் கருத்தை கேட்க ஆவலாக உள்ளேன்,இதில் பிழையிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்வேன் சரி என்றால்!!!